20.3.08

ராசீவ் காந்தியை கொன்றவன் யார்? சதிகாரக் கூட்டம் எது? - திருச்சி வேலுசாமி

ராசீவ் காந்தியை கொன்றவன் யார்? சதிகாரக் கூட்டம் எது? - திருச்சி வேலுசாமி

“வாடிய பயிரைக்கண்டு வாடும் நெஞ்சம் வேண்டும்” என்ற வள்ளலாரும், பற்றிப் படர கொழுகொம்பின்றி தவித்த முல்லைக் கொடிக்காக, தான் ஏறிவந்த தேரையே கொடிபடர நிறுத்தி விட்டுப் போன பாரிவள்ளல் போன்றோரும் பிறந்து, தவழ்ந்து, வாழ்ந்த புண்ணிய பூமிதான், நமது தமிழ் மண். இந்த மண்ணில் நவீன விஞ்ஞான முன்னேற்றத்தில் உலகத்தரத்திற்கு இந்தியாவை உயர்த்திக் காட்டிய முன்னாள் பிரதமர் திரு. ராசிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் நாள் படுகொலை செய்யப்பட்ட செய்திகேட்டு பதறித்துடிக்காதவர்கள் எவரும் இலர். தமிழகத்தின் குக்கிராமங்களில் உள்ள தாய்மார்கள் கூட, தங்களது சொந்த பிள்ளை மரணமடைந்ததைப்போல் துக்கத்தில் தவித்ததை நாடறியும்.
தமிழ் மக்களை நேசித்த இளம் தலைவர் ராசீவ் காந்தி மறைந்து ஏறத்தாழ 17 ஆண்டுகள் கடந்தும் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படாததும், சதிகாரர்கள் கண்டறியப்படாததும் இந்த தேசத்தின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். இந்தியர்கள் அனைவருக்கும் மாபெரும் அவமானம்.

இந்த படுகொலையின் காரணமாக பலஅப்பாவித் தமிழர்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாக்கப்பட்டனர் என்பது கசப்பான உண்மை. ஆனால், அந்தக் கொலைச்சதியில் சம்மந்தப்பட்ட சதிகார்களில் சிலர் அரசின் பாதுகாப்போடு மகிழ்ச்சியாக இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை. ராசீவ் படுகொலைக்கு மூளையாக செயல்பட்ட குள்ள நரிக்கூட்டம், தங்களின் சாமர்த்தியத்தால் ஒரு சிலரை “பலிகடா”வாக்கிவிட்டு வழக்கை முடித்துவிட நினைத்தது. நல்லவேளையாக அப்படி நடைபெறவில்லை.

தமிழர்களின் மீது விழுந்த இந்தப்பழி இன்றளவும் நிலைக்க, தமிழினப் பகைவர்களும், ஏகாதிபத்திய சக்திகளும் காரணமாக இருந்தாலும்;;;; ஒருசில தமிழகத் தலைவர்களின் சுயநலமும் காரணம் என்பதனை மறுக்க முடியாது.
திரு. குஐ;ரால் தலைமையில் நடைபெற்ற மத்திய அரசில் தி.மு.கழகத்ததைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அங்கம் வகித்தபோது, “தலைவர் ராசீவின் கொலைக்குக் காரணமான தி.மு.கழக அமைச்சர்களை நீக்காவிட்டால், ஆட்சியைக் கவிழ்ப்போம்”, என்று எச்சரித்த காங்கிரஸ் சொன்னபடியே அந்த ஆட்சியைக் கவிழ்த்தது. அதே காங்கிரஸ்தான் இப்போது தனது தலைமையில் நடைபெறுகின்ற மத்தய அரசில் தி.மு.கழகத்தை சேர்ந்த ஏழு பேர்களை அமைச்சர்களாக வைத்திருக்கிறது.

“ராசீவ் கொலைச் சதியில் முக்கிய பங்கு வகித்தவர், திரு.முப்பனார்”, என்று முன்னாள் பிரதமர் திரு. நரசிம்மராவை மேடையில் வைத்துக் கொண்டே சேலத்தில் ஆவேசமாக குற்றம் சாட்டிப் பேசியவர் செல்வி nஐயலலிதா. அடுத்த தேர்தலில் திரு. மூப்பனாரை மேடையில் வைத்துக்கொண்டு அவரை nஐயலலிதா பாராட்டி புகழாரம் சூட்டியதையும் மறக்கமுடியாது.

“ராசீவின் கொலைகச்சதியில் பெரும்பங்கு nஐயலலிதாவுக்கு இருக்கிறது. அவரை விசாரிக்க வேண்டும்”, என்று nஐயின் கமிஷனில் பிரமாண வாக்குமூலம் அளித்தவர் திரு. சுப்ரமணிய சாமி. “குள்ளநரி புத்தி கொண்ட மோசடிப் பேர்வழி சுப்ரமணிய சாமி. அவரை நம்பாதீர்கள்”, என்று சொன்னவர் nஐயலலிதா. ஆனால், “பெண்ணினத்திற்கே பெருமை சேர்க்க வந்த புரட்சித்தலைவி”, என்று nஐயலலிதாவை சுப்ரமணிய சாமியும், உலகப்பொருளாதார மேதையாக விளங்குகின்ற அறிவுஐPவி ‘சாமி” என்று புகழாரம் சூட்டிக் கொள்வதோடு அடிக்கடி விருந்துண்டு மகிழ்கிறார்கள் என்பதுதான் தற்போதைய நிலை.

இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியலுக்கு சில தலைவர்கள் துணைபோனதால் ராசீவ் கொலையில் உண்மையை கண்டறியும் விசாரணையில் தொய்வு என்பதனை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இந்த கடந்தகாலத்தவறுகளைக் களைந்து விட்டு பொறுப்பான சில பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் தமிழர்கள் அனைவருக்கும் இருக்கிறது.

இந்த கோரக்கொலையின் வாயிலாக தமிழ் இனத்தின் மீது களங்கமும், தீராப்பழியும் சுமத்தப்பட்டிருக்கிறது என்பதனை மறுப்பதற்க்கில்லை. தமிழினத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற கறையைத் துடைக்க வேண்டுமானால், உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். அது இன்றைய தலைமுறைத் தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும்.

அன்மையில் தர்மபுரி காவல் நிலையத்தில் திருட்டுபோன துப்பாக்கிகள் வாழைத் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வந்தது. ஆனாலும், உண்மையைக் கண்டு பிடிக்க பலரை உண்மை கண்டறியும் கருவியில் பரிசோதித்தார்;கள் என்ற செய்தியும் வந்தது. உயிரோ, உணர்ச்சியோ இல்லாத துப்பாக்கிகளுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையை இந்திய தாயின் மதிப்பு மிக்க மைந்தன் ராசீவின் படுகொலைக்கு காரணமானவர்களை ஏன் உட்படுத்தப்படவில்லை?

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பே nஐயின் கமிஷனில் நான் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளை சுமத்திய சுப்ரமணிய சாமிக்கு எதிரான பிரமாண வாக்குமூலத்தை அளித்துள்ளேன். ராசீவ் கொலைக்கு பெரிய அளவில் துணை போனவர்கள் என்று அன்னை சோனியாவையும், அவரது தாயாரையுமே சொல்கிற அளவுக்கு திரு. சுப்ரமணிய சாமிக்கு “திமிர்” எப்படி வந்தது.

காலம் கடந்தாலும் இப்போதாவது எல்லோருடைய சந்தேகப்பார்வையின் மையப்புள்ளியாய் விளங்குகின்ற திரு. சுப்ரமணிய சாமியை உண்மை கண்டறியும் கருவியில் பரிசோதிக்க வேண்டும் என்று மத்திய அரசை நான் வற்புறுத்துகிறேன். இதில் உள்நோக்கம் எனக்கு இருப்பதாக யாரும் நினைத்தால், முதலில் என்னை பரிசோதிக்கலாம்.

இந்த நியாயமான எனது கோரிக்கையை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என வேண்டுகிறேன். மத்திய அரசு எனது கோரிக்கையை நிராகரிக்குமானால், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
20-03-2008
===========================
The above statement was released at a Press Meet at Chennai Press Club, Chennai
On behalf of Periyar Anna Peravai, a Press Meet was organised at Chennai Press Club at 11 am on 20-03-2008.
Participants :
  • Mr. Agni Subramaniam, Executive Director, MANITHAM - Human Rights Org.
  • Mr. Trichy Velusamy, a prominent Congress personality.
  • Mr. Trichy Soundararajan, former MLA, Tamil Nadu Assembly.
  • Prof. A.S.Manian, a well know Tamil Scholar
  • Mr. Inqulab, Lyrics writer.

Mr. Trichy Velusamy, a prominent Congress member, has openly declared that Mr. Subramania Swamy and Mr. Chandra Swamy are the culprits behind Rajiv assassination.

No comments: