மார்ச்சு 12 2008திரு. கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
தமிழ்நாடு
தமிழீழம் தமிழகம் இந்தியா
அன்புடையீர் வணக்கம்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம. இந்திய அரசின் துரோகத்தாலேயே தமிழீழ விடுதலைப் போராடடம் தள்ளிப் போட்டுக்கொண்டு போகிறது.
ஒரு புறம் "இலங்கைத் தமிழர் மலேசியத் தமிழர் பற்றிய கரிசனை எங்களுக்கு உண்டு. அமைதி வழியில் தமிழர்களது வேட்கையை நிறைவு செய்யும் வண்ணம் இனச சிக்கல் (“The interests of ethnic Thamils in Sri Lanka as well as in Malaysia mattered to Delhi. The way forward lies in a peacefully negotiated settlement within the framework of a united Sri Lanka acceptable to all communities, including the Thamils. India was concerned about the recent violence in that nation and was "closely monitoring" the developments. India has welcomed the "declared intention" of Sri Lanka to fully implement the 13th Amendment, a move that could give a degree of autonomy to Thamil-dominated regions in that country.”) தீர்க்கப்படவேண்டும்" என இந்திய வெளியுறவு அமைச்சர் பிரனாப் முகர்ஜி சொல்கிறார். மறுபுறம் இந்தியா சிறிலங்காப் படைக்கு ஆயுதம் ராடர். போர்க் கப்பல் உளவுத் தகவல் சிறப்புப் பயிற்சி போன்ற-வற்றைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் மக்களை நாளும் குண்டு போட்டுக் கொல்கிற சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு இந்தியப் படைத்துறை அதிகாரிகள் செங்க்ம்பள வரவேற்புக் கொடுத்து வரவேற்கிறார்கள். கஷ்மீர் போர் முனைக்கு இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை கூட்டிக் கொண்டு சென்று உபசரிக்கிறார்கள். சிங்கள இராணுவத்தைப் புலிகள் வெல்ல விடமாட்டோம் என்று உறுதிமொழி கொடுக்கிறார்கள்.
இதனை எதிர்த்து உங்களைத் தவிர வேறு யாரும் அறிக்கைவிட வில்லை. கண்டிக்கவும் இல்லை. ஜெனிவாவில் நடக்கும் அய்யன்னாவின் மனிதவுரிமை அமர்வுகளில் சிறிலங்காவின் மனிதவுரிமை மீறல்களை நியாயப்படுத்திப் பேசும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஏனைய நாடுகள் பாகிஸ்தான் மற்றும் யப்பான் நாடுகள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் அணுகுமுறை தமிழ்மக்களுக்கு மாறாக இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் தரப்பால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது அரசியல் திருத்த சட்டத்தை இந்தியா பாராட்டி வரவேற்றுள்ளது. இந்தியப் பிரதமர் இந்திய வெளியுறவு அமைச்சர் போன்றோர் சவுத் புளக்கில் உள்ள பார்ப்பனர்களாலும் மலையாளிகளாலும் பிழையாக வழி நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு தவறான ஆலோசனை வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற மலையாளி - பார்ப்பான் கே. எம். நாராயணனுக்கு இருக்கும் செல்வாக்கில் நூறில் ஒரு பங்கு கூட தமிழக முதல்வருக்கு இல்லாமல் இருக்கிறது.
சிறிது காலம் முதல்வர் கருணாநிதி தமிழர் சிக்கல் பற்றி சட்ட சபையில் பேசினார். தீர்மானம் நிறைவேற்றினார். பின்னர் 4 தமிழக மீனவர்களை வி.புலிகள் கொன்றுவிட்டனர் என முன்னாள் காவல்துறை அதிகாரி சொல்கிறான் எனக் கூறி "வி.புலிகளை நாங்கள் ஆதரிகக மாட்டோம். அவர்களுக்குக் கொடுத்து வந்த ஆதரவை எப்போதோ திருப்பிப் பெற்றுக் கொண்டுவிட்டோம் - வி.புலிகளைப் பற்றிய அணுகு முறையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களும் நானும் ஒத்த கொள்கையோடு இருக்கிறோம்" என்று முதல்வர் கருணாநிதி எந்த துக்கமோ வெட்கமோ இன்றி அறிவித்தார். அரசியலில் கீரியும் பாம்பும் போல் இருக்கும் முதலவர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் வி.புலிகளைப் பொறுத்தளவில் நிகமும் தசையும் போல் இருக்கிறார்களாம்!
வி.புலிகளை விட்டுவிடுவோம். நாளும் பொழுதும் குண்டு போட்டுக் கொல்லப்படுகிற தமிழ்மக்களுக்கு தமிழக முதல்வர் குரல் கொடுக்க வேண்டாமா? பட்டினி கிடந்து சாகும் சொந்தங்களுக்குக் குரல் கொடுக்க வேண்டாமா? ரோம் எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னனுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் வேறுபாடு ஏதாவது இருக்கிறதா?
நீங்கள் கலைஞர் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று புகழலாம். அனைத்துக் கட்சியினரும் அர்ச்சகர் ஆகலாம்இ பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடம்இ தில்லை அம்பலத்தில் தேவார - திருவாசகம் பாடலாம் போன்றவற்றை அவர் செய்து முடித்திருப்பது பாராட்டப்பட வேண்டிய சாதனைகள்தான். ஆனால் அவர் உங்களைப் போன்றவர்கள் பக்கத்தில் இருந்து இடித்தபடியால்தான் இவற்றைச் செய்தார். இல்லாவிட்டால் செய்திருக்க மாட்டார். மேலும் இவற்றை அவர் எப்போதோ செய்து முடித்திருக்க வேண்டும். 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தால் அதனால் அரசியல் இலாபம் எதுவும் இல்லை என்று முதல்வர் நினைக்கிறார். " தனது அரசு சிறுபான்மை அரசு காங்கிரசைப் பகைத்தால் ஆட்சி பறி போய்விடும்" என்று நினைக்கிறார். அதே சமயம் மத்தியில் திமுக தயவில்தான் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது என்பதை அவர் ஏன் சிந்தித்துப் பார்க்க மறுக்கிறார்?
மேலும் "கொள்கை என்பது உடுத்திருக்கிற வேட்டிஇ பதவி என்பது தோளில் போட்டிருக்கிற துண்டு" எனச் சொல்பவருக்கு பதவி பறிபோய்விடும் என்ற பயம் வரலாமா?
முதல்வர் கலைஞர் தமிழீழத் தமிழர்களுக்கு மிகப்பெரிய வரலாற்றுத் தவறைச் செய்து கொண்டிருக்கிறார். அவரைக் காக்கும் தெய்வம் என்று எண்ணியிருந்த காலம் இருந்தது. இப்போது காக்கும் தெய்வம் காட்டிக் கொடுக்கிற தெய்வமாக மாறிவிட்டதா என்ற அங்கலாய்ப்பு எங்களுக்கு உண்டு. அய்யங்கார் ஜெயலலிதாவுக்கும் தமிழினத் தலைவர் கருணாநிதிக்கும் வேறுபாடு இல்லாமல் இருப்பது மிகவும் வெட்கக் கேடானதாகும். இதனை எமது போகூழ் என்று சொல்லலாமா?
இதை எழுதிக்கொண்டிருக்கும் போது வன்னி நிலப்பரப்பின் மீது சிறிலங்கா விமானங்கள் குண்டு வீசியுள்ளன!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வென்றெடுக்க குருதி சிந்தி கண்ணீர் சிந்தி வியர்வை சிந்திப் போராடும் தமிழீழத் தமிழர்கள் அதற்கான விலையைக் கொடுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.போர்க்களத்தில் புலிகள் தங்கள் இளைய இனிய உயிர்களை அந்த விடுதலை வேள்வியில் ஆகுதி செய்து வருகிறார்கள்.
மிக்க அன்புடன்
நக்கீரன், தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா
No comments:
Post a Comment