22.6.08

WTM - These provisions do not, in our view, accord with the principles of fundamental

பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட விதிகள் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பற்றிய உரிமைமுறிவுக் கோட்பாடுகளுக்கு ஒத்துப் போகவில்லை!

(கடந்த வியாழக்கிழமை (யூன் 19) அன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் உ.த. இயக்கம் அமர்த்தியுள்ள வழக்கறிஞர்களில் ஒருவரான ஆயசலள னுயஎனைந படித்த அறிக்கையின் தமிழாக்கத்தையும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கொடுதத பதிலும் கீழே கொடுக்கப பட்டுள்ளது.)

உ.த. இயக்கம் பயங்கரவாதப் பட்டியலில் பட்டியல் இட்டதை எதிர்த்து நிச்சயமாக நாங்கள் வழக்குத் தொடர இருக்கிறோம். அதன் முதற்படியாக குறிப்பிட்ட விதியை நிறுத்தி க்குமாறு கேட்டு மைய அரசின் நடுவர் மன்றத்தில் விண்ணப்பம் செய்வோம். அதன் பின்னர் அமைச்சருக்கு விண்ணப்பம் செய்வோம்.

அமைச்சர் தனது பரிந்துரையை மீள்கவனிப்புச் செய்ய நாட்டம் காட்டமாட்டார் என வைத்துக்கொண்டால் நாங்கள் உ.த.இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் பட்டியலிட்ட அமைச்சரின் முடிவை சட்ட மீளாய்வு செய்யுமாறு மைய அரச நடுவர் மன்றத்துக்கு விண்ணப்பம் செய்வோம்.

அது மட்டுமல்லாது பயங்கரவாதப் பட்டியலில் பயங்கரவாத அமைப்புக்கள் எனப் பட்டியல் இடப்படும் விதிகள் அரசமைப்பு சட்டத்துக்கு உடன்பாடானதா என்பது பற்றியும் வழககாட உத்தேசித்துள்ளோம். ஒரு அமைப்பை பட்டியலில் சேர்க்கும் முறைமை பற்றிப் பல விடயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். முதலில் விசாரணை மூடிய கதவுக்குப் பின்னால் நடைபெறும். இலக்கு வைக்கப்பட்டுள்ள அமைப்புக்கு அறிவித்தல் கொடுக்கப் படுவதில்லை. அமைச்சர் எந்தச் சான்றுகளின் அடிப்படையில் - அவற்றின் உண்மை பொய் பற்றி; சோதித்துப் பார்த்தாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும் - தனது பரிந்துரைகளை வழங்கினார் என்பது தெரிவிக்கப்படுவதில்லை. இரண்டாவது, சட்ட மீளாய்வு விதிகள் அமைச்சரின் தகவலை நடுவர் இரகசியமாக பரிசோதனை செய்ய அனுமதிக்கிறது. மேலும் அந்தத் தகவலை வெளியிடுவது தேசிய பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் என அமைச்சரின் வழக்கறிஞர் கருதினால் பட்டியல் இடப்பட்ட அமைப்பு இல்லாமலே சாட்சியத்தை நடுவர் கேட்கமுடியும். அமைப்பைப் பொறுத்தளவில் அது தனக்கு எதிரான தகவலின் சுருக்க
அறிக்கையை பெறமட்டும் உரித்துடையது. இந்தச் சுருக்க அறிக்கை நடுவருக்கும் கொடுக்கப்படும். இதன் மூலம் அமைச்சர் எடுத்த முடிவுக்கான காரணங்கள் “நியாயமான முறையில் தெரிவிக்கப்படும்” விசாரணைக்கு “நியாயமான வாய்ப்பு” வழங்கப்படும்.

எந்தவொரு ஆவண சான்றையும் பார்க்கும் உரிமையோ சாட்சி சொல்லவரும் சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்யும் உரிமையோ அந்த அமைப்புக்கு இல்லை.
எங்களது பார்வையில் இந்த விதிகள் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பற்றிய உரிமைமுறிவுக் கோட்பாடுகளுக்கு (Pசinஉipடநள ழக ஊhயசவநச ழக சுiபாவள யனெ குசநநனழஅள) ஒத்துப் போகவில்லை.
இப்படிப் பட்டியலில் உ.த. அமைப்பு பட்டியல் இடப்பட்டது அந்த அமைப்புக்கு மட்டும் அல்லாமல அதனோடு தொடர்பு ைத்திருப்போருக்கும் பாராதுராமான விளைவை ஏற்படுத்தும். ஒரு அமைப்பு பயங்கரவாதப் பட்டியலில் பட்டியலிடப் பட்டவுடன் அது சேகரித்தல், கொடுத்தல், உடைமையை – அது அந்த அமைப்புக்குப் பயன்படுமானால் அல்லது அந்த அமைப்புக்கு நன்மை நல்குமானால் - அந்த அமைப்பு எதன்பொருட்டு அதனைப் பயன்படுத்தும் என்பது பொருட்படுத்தாது - கொடுக்குமாறு ஒருவரை அழைத்தால் அது 10 ஆண்டுகள் வரை நிறைத்தண்டனை வழங்கக் கூடிய குற்றவியல் குற்றமாகும். இது தன்னார்வத் தொண்டர்களாலும் தன்னிச்சையாக வழங்கப்படும் கொடுப்பனவாலும் இயங்கும்
உ.த.இயக்கம் போன்ற அமைப்புக்குப் பெரிய அழிவாகும். இந்த விதிகளின் நோக்கம் நம்பமுடியாதவாறு விசாலமானது. இதுவரை எந்த நடுவர்மன்றமும் குறிப்பிட்ட விதிகளின் உண்மையான நோக்கத்தை ஆராயவோ அல்லது பொருள்பெயர்க்கவோ வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே உ.த.இயக்கத்தின் சமூக நூலகத்துக்கு ஒரு நூலை யாராவது அன்பளிப்புச் செய்தால் அது குற்றமாகக் கருதப்படலாம். உ.த.இயக்கத்தால் பிள்ளைகளுக்கு
நடத்தப்படும் ஒரு விளையாட்டுப் போட்டிக்கு கருவிகளை அன்பளிப்புச் செய்தால் – அது ஒரு பந்தாகக் கூடாக இருக்கலாம் - குற்றமாகக் கருதப்படலாம். தமிழ்மொழி வகுப்புகளுக்கு கல்வி தொடர்பான பொருட்களை அன்பழித்தல் குற்றமாகக் கருதப்படலாம். இதனோடு ஒரு அமைப்பை பயங்கரவாத அமைப்பு என முத்திரை குத்தி அவமானப்படுத்துவதை
கூட்டிப்பாருங்கள்?

அப்போதுதான் இப்படியான ஒரு முடிவை எவ்வளவு கவனமாக எடுக்க வேண்டும் பொதுமக்களது கூர்ந்த ஆய்வு மற்றும் நீதியியல் மேற்பார்வை மற்றும் எமது அரசமைப்புச் சட்டம் வழங்கும் நடைமுறைப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்க வேண்டும் என்பதன் அவசியம் புரியும்.

நாங்கள் உ.த. இயக்கம் பட்டியல் இட்டதை எதிர்த்து வழக்காட ஒரு சட்டப் பாதுகாப்பு நிதியத்தை உருவாக்கவுள்ளோம். அதில் வழக்கறிஞர்களும் கனேடிய தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இடம்பெறுவார்கள். அதற்கும் உ.த. இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. அந்த நிதியத்துக்கு பங்களிப்புச் செய்ய விரும்புவர்களுக்கு அது பற்றிய விபரத்தை விரைவில் வெளியிடுவோம்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவற்றுக்கான பதில்கள் நடுவர் மன்றத்தில் அளிக்கப்படும் என்று ஆயசடலள னுயஎனைந சொன்னார். எங்கள் மீது சாட்டப்படும் ஒவ்வொரு குற்றத்துக்கும் தகுந்த பதில் அப்போது அளிக்கப்படும் என்றார். உ.த.இயக்கத்தினருக்கு எதிராக ஏதாவது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு நிச்சயமாக அப்படி ஒன்றும் இல்லை என்றார். .உ.த.இயக்க ரொறன்ரோ அலுவலகத்தை கவல்துறை மூடிவிட்டதா என்ற கேள்விக்கு அப்படி இல்லை – மொன்றியல் உ.த.இயக்க அலுவலகம் மூடப்பட்டது ஆனால் ரொறன்ரோ அலுவலகம் அப்படி மூடப்படவில்லை. அதன் காப்பகக் கணக்குகள் மட்டும் உறையப் போடப்பட்டிருப்பதாகப் பதில்
அளித்தார்.

உ.த.இயக்கம் கனேடிய தமிழர்களிடம் வலுக்கட்டாயமாகப் பணம் அறவிடப்பட்டது எனக் குற்றம்சாட்டபடுவது பற்றி உங்கள் பதில் என்ன என்ற கேள்விக்குப் பதில் அளித்த உ.த.இயக்க துணைத் தலைவர் தங்கவேலு அவர்கள் அந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாகவும் இது தொடர்பான ஒரு வழக்குத்தானும் காவல்துறையினால் தொடுக்கப்படவில்லை என்றார். வழக்கறிஞர் ஆயசடலள னுயஎனைந் வருகை தந்த செய்தியாளர்களுக்கு மீண்டும நன்றி கூறி செய்தியாளர் மாநாட்டை முடித்து வைத்தார். ரொறன்ரோவில் உள்ள முக்கிய ஊடகங்கள் - செய்தித்தாள்கள், வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. [THE END]